தமிழக தேர்தலுக்கு பிறகு வண்டியை மதத்துக்கு திருப்பிய பாஜக

575பார்த்தது
தமிழக தேர்தலுக்கு பிறகு வண்டியை மதத்துக்கு திருப்பிய பாஜக
இந்தியாவில் பல்வேறு வட மாநிலங்களில் வரும் 26ஆம் தேதி 2 ஆம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அம்மாநிலங்களில் தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் நேற்று (ஏப்ரல் 21) பொதுக்கூட்டதில் மோடி, இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை மத ரீதியில் பேசாமல் அமைதி காத்த பாஜக , தற்போது வளர்ச்சியை பற்றி பேசாமல் மதம் பற்றி பேச தொடங்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி