மத்திய அமைச்சருக்கு தமிழ்நாட்டு அமைச்சர் பதிலடி!

70பார்த்தது
மத்திய அமைச்சருக்கு தமிழ்நாட்டு அமைச்சர் பதிலடி!
தமிழ் நாட்டு மக்கள் கர்நாடகத்திற்கு வந்து குண்டு வைக்கிறார்கள் என்று ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா பேசியிருப்பது தென் மாநிலங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ள வெறுப்புப் பேச்சு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி அவர்கள் தமிழ் கற்றுக் கொள்கிறேன், தமிழை நேசிக்கிறேன் என்று போடும் நாடகத்தின் பின் ஒளிந்திருப்பது பாஜகவின் இப்படிபட்ட தமிழர்கள் மீதான வெறுப்பு தான். அவர்கள் ஒருப்போதும் தமிழர்கள் மீது மரியாதை கொண்டதே இல்லை. இங்கே தமிழர்களுக்கு நண்பர்களாக வேடம் போட்டுவிட்டு, வெளியே தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலேயே மும்மரமாக இருக்கிறார்கள். மேலும் ஒற்றுமையாக இருக்கும் தென் மாநிலங்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தி தேர்தலில் ஆதாயம் தேடும் திட்டமிட்ட வெட்கக்கேடான முயற்சியே இது. இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு கண்டிப்பாக எங்கள் கர்நாடக சகோதர சகோதரிகள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி