தமிழ்நாடு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது - சபாநாயகர்

68பார்த்தது
தமிழ்நாடு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது - சபாநாயகர்
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் 4ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை புறக்கணித்த நிலையில், இதனை அப்பாவு வாசித்து வருகிறார். அதில், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை விட தமிழகத்தின் வளர்ச்சி வேகம் அதிகம்' எனக்குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி