கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத் தக்கது - நடிகர் ரஞ்சித்

80பார்த்தது
கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத் தக்கது - நடிகர் ரஞ்சித்
வைரல் கன்டென்ட் என்பதற்காக கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத் தக்க விஷயம் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கோவையில் சாய் பிரசாத் எனும் புதிய ஸ்டுடியோ சிறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித், நாகரீகம் என்பது எல்லோருக்கும் அடங்கிய ஒரு விஷயம் எல்லாரும் செய்யும் வேலை போன்று நடிப்பு என்பதும் ஒரு வேலையே.

வைரல் கன்டென்ட் என்பதற்காக கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத் தக்க விஷயம். பொதுவாகவே கூத்தாடிகள் என்ற கண்ணோட்டம் மக்களுக்கு இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் நடிக்காத ஆள் இல்லை. இப்படி மனதை காயப்படுத்தும் படி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜூ பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி