போதைப் பொருள் கடத்திய சினிமா பிரபலம்

39400பார்த்தது
போதைப் பொருள் கடத்திய சினிமா பிரபலம்
மேற்கு டெல்லியின் பசாய் தாராபூரில் உள்ள குடோன் ஒன்றில் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்கிற போதைப்பொருளை, டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை கடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 'மங்கை' என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சித்திக் என்பவரே கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி