வேப்ப மரத்தின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வேப்பங்கொட்டை மருந்தாகப் பயன்படுகிறது. வாய்வு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் வேப்பம்பூவை மருந்தாகவும் பயன்படுத்தலாம். இப்படி வேப்ப மரத்தில் பல்வேறு நற்குணங்கள் இருக்கின்றன்.