முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு

58பார்த்தது
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு
கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மீது அம்மாநில சிஐடி அதிகாரிகள் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவிக்காக அவரது வீட்டுக்குச் சென்ற பெண்ணின் 17 வயது மகளிடம் அவர் சில்மிஷம் செய்ததாக பாதிக்கப்பட்ட தாய் போலீசில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் அவரது சகோதரர் விரைந்து நீதி கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார். அதன்பேரில் நடந்த விசாரணையில், எடியூரப்பா மீது சிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.