வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி பற்றி பாமகவிற்கு முதல்வர்
ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ''காங்கிரஸிடம் இருந்து 27% இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்த பாமகவால், தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சமூக நீதியை வென்றெடுத்து கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் சமூகநீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு சமூக நீதி குறித்த கவலை வேண்டாம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.