உத்தரப்பிரதேசத்தில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த முக்தார் அன்சாரி மரணத்தை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அன்சாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் பலத்த பாதுகாப்புடன் அன்சாரியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.