சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு

55பார்த்தது
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சட்டப்பேரவையில் உள்ள கணினிகள், ஒலிப்பெருக்கிகள், இருக்கைள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பது குறித்து சபாநாயகர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின் போது, சட்டப்பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். அதே போல், வேளாண்மை, நிதித்துறை உள்ளிட்ட பல துறைகளின் அமைச்சர்களும் நிதிநிலை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி