பண்ணை வீட்டில் அழகிகளுடன் பிரபல தொழிலதிபர் கைது

67081பார்த்தது
பண்ணை வீட்டில் அழகிகளுடன் பிரபல தொழிலதிபர் கைது
சிவகங்கை: காரைக்குடியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான பாட்ஷா (51). இவருக்கு சொகுசு பண்ணை வீடு கொரட்டி கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஜெயஸ்ரீ (37) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2 பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்ததாகவும், அறையினுள் பாட்ஷாவுடன் அவர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வீட்டின் அறையை திறந்தபோது பாட்ஷா இரு பெண்களுடன் அரை நிர்வாணமாக இருந்துள்ளார். விஐபிகளுக்கு பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து விருந்தாக்கும் பெண் பாலியல் புரோக்கர் ஜெயஸ்ரீ மற்றும் பாட்ஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர். சொகுசு கார், மொபைல் போன்கள் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி