காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள் பாஜகவில் இணைந்தது தவறு!

71பார்த்தது
காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள் பாஜகவில் இணைந்தது தவறு!
காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள் பாஜகவில் இணைந்தது தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, பத்தனம்திட்டாவில் போட்டியிடும் எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் ஆந்த்ரோ ஆண்டனி வெற்றி பெற வேண்டும். எனது மதம் காங்கிரஸ். நான் கே.எஸ்.யு-வில் சேர்ந்த காலத்திலிருந்தே அரசியல் வேறு குடும்பம் வேறு என்ற நிலைப்பாட்டை எடுத்து வருகிறேன். காங்கிரஸும் அம்பேத்கரும்தான் அரசியலமைப்பை உருவாக்கினார்கள். அந்த அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் போராட்டம் இது என்றார்.

தொடர்புடைய செய்தி