ஏலியன்களுடன் தொடர்பு.. கேரள தம்பதி தற்கொலை

561பார்த்தது
ஏலியன்களுடன் தொடர்பு.. கேரள தம்பதி தற்கொலை
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நவீன் தாமஸ், இவரது மனைவி தேவி. இவர்களது தோழி ஆர்யா நாயர். மூவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் மூவரும் அருணாச்சல பிரதேசத்தின் இடா நகரில் இருந்து 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜீரோ நகரில் ஓட்டல் அறை ஒன்றில் சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து இவர்களது லேப்டாப்பை கைப்பற்றி சோதனை செய்ததில் திடுக்கிடும் தகவலாக வரும் காலத்தில் மனிதர்கள் உட்பட மற்ற விலங்குகளும் வேற்றுகிரகத்திற்கு கொண்டு செல்லப்படும் என நம்பியிருந்துள்ளனர். மேலும் ஏலியன்கள் உள்ளன என்பதையும் நம்பியுள்ளனர். மித்தி என்ற கற்பனை நபருடன் உரையாடல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி