'தில்லுமுல்லு' ரஜினி பாணியில் IPL பார்த்து சிக்கிய ரசிகை

56பார்த்தது
'தில்லுமுல்லு' ரஜினி பாணியில் IPL பார்த்து சிக்கிய ரசிகை
ஐபிஎல்லில் ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகையான நேஹா திவேதி போட்டியை நேரில் காண பேமிலி எமர்ஜென்சி என அலுவலக மேனேஜரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். டிவியில் போட்டியை பார்த்த போது திவேதியை கண்டு அதிர்ந்த மேனேஜர் பின் அவரிடம் உங்களை சோகமான முகத்துடன் மைதானத்தில் பார்த்தேன் என்றதும் நேஹாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. இதுதொடர்பான கலந்துரையாடல் ஸ்க்ரீன்ஷாட்டை நேஹா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட அது வைரலானது.