கள்ளச்சாராயம்: முக்கிய குற்றவாளி சின்னதுரை கைது

15476பார்த்தது
கள்ளச்சாராயம்: முக்கிய குற்றவாளி சின்னதுரை கைது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சின்னதுரையை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்று 49 பேர் மரணத்திற்கு காரணமாக முக்கிய குற்றவாளி சின்னதுரையை போலீசார் கைது செய்தனர். கடலூரில் பதுங்கியிருந்த சின்னதுரையை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, தாமோதரன், விஜயா ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி