சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்

57பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில், 2022-23 மற்றும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி முகாமானது நடைபெற்று வருகிறது.

அவ்வாறு, கடந்த 13. 09. 2024 அன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உயர்வுக்குப் படி - உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமில் கலந்துகொண்ட 70-க்கும் மேற்பட்ட மாணவர்களில் 32 மாணவர்கள் அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு உடனடி சேர்க்கைக்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் நாளைய தினம் (18. 09. 2024) சிங்கம்புணரி SS மெட்ரிக் பள்ளியில் நடைபெறவிருந்த உயர்வுக்கு படி முகாமானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 19. 09. 2024 அன்று யாதவா திருமண மண்டபத்திலும், அதேபோன்று வருகின்ற 20. 09. 2024 அன்று காரைக்குடியில் நடைபெறவிருந்த உயர்வுக்கு படி முகாமானது வருகின்ற 25. 09. 2024 அன்று அழகப்பா பல்கலைகழகத்திலும் சிறப்பாக நடைபெறவுள்ளது. எனவே, மாணாக்கர்கள் இதனைக் தங்களுக்கு பயனுள்ள வகையில், பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி