புதுச்சேரி புதுக்குப்பம் கடற்கரையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் குல்மி ஒட்டகம் ஒன்றைப் பராமரித்து வந்தார். கடந்த 15ம் தேதி அவர் மீது விழுந்த ஒட்டகம் அவரைத் தூக்கி வீசியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட அவர் பலியானார். விசாரணையில், ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறு மற்றும் கழுத்தில் இருந்த கயிறு அகிய இரண்டையும் ஒரே நேரத்தில் இழுத்த போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியது தெரிய வந்துள்ளது.