லாரி மோதி தூய்மைப் பணியாளர்கள் பலி

52பார்த்தது
லாரி மோதி தூய்மைப் பணியாளர்கள் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றிவரும் நாகரத்தினம் (38), லட்சுமி(35) ஆகியோர், தங்களுக்கு தெரிந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் தேவர் சிலை அருகே சென்றுகொண்டிருந்தபோது லாரி ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த மூன்று பேரில் தூய்மை பணியாளர்கள் மீது லாரி ஏறிய நிலையில் இருவரும் சம்பவ இடத்தியிலே உயிரிழந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி