மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நீருக்கடியில் செல்லும் மெட்ரோ

53பார்த்தது
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 4.8 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 520 மீட்டர் நீளமுள்ள பாதை ஹூக்ளி நதிக்கு அடியில் செல்கிறது. இதற்காக நதிக்கு அடியில் 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையின் ஆழம், வளைவு, மண்ணின் தன்மை, வடிவமைப்பு காரணமாக இந்த வழித்தடம் பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 6ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் சேவை நேற்று (மார்ச் 15) மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

தொடர்புடைய செய்தி