நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

68பார்த்தது
நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் தாண்டா கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). விவசாயி. இவருக்கு சேலம் மாவட்டம் வேப்பிலைப்பட்டி குமாரபாளையம் பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மற்றும் சிலர் சேர்ந்து சரவணனிடம் நிலத்தை வேறு யாருக்கும் விற்ககூடாது எனக்கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆதிமூலம், செல்வி, கணேசன், பெரியதம்பி, கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி