இடங்கணசாலை நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு.

83பார்த்தது
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சியில் 50 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், அதனை உரிய நேரத்தில் தருவதில்லை என்றும் கோரி கே. கே. நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்சனை குறித்து நகராட்சி அலுவலகத்தை நாடி தீர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். இதன் அடிப்படையில் கலைந்து சென்றனர். இதனால் இப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி