சேலம் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் வேலு பிரச்சாரம்

79பார்த்தது
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், சேலம் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து  பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, குறிப்பாக பெண்களுக்கு என்று அறிய நல்ல பல திட்டங்களை வகுத்து செயல்படுத்து வரும் நமது முதல்வர் ஸ்டாலின் நல்லாசியோடு அரசியல் அனுபவம் பெற்ற உங்களது வேட்பாளர் செல்வகணபதி ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு  ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தற்போது பாஜ அரசின் ஜிஎஸ்டி வரியால் பவுன் , அரிசி முதல் கடும் விலையேற்றமும், மேலும் ஜிஎஸ்டி வரியால் சிறு தொழில் பெரிய அளவில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்றும், இதனை  மோடி கவலைப்படாமல் உள்ளார் என்றும் , ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என தெரிவித்த மோடி இதுவரை   ஒருவருக்கு கூட ஒரு பைசா வங்கி கணக்கில் செலுத்தவில்லை. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம், துணைச் செயலாளர் சுரேஷ்குமார், எம்எல்ஏ ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி , ஆட்டையாம்பட்டி பேரூர் செயலாளர் முருகபிரகாஷ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி