சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஊமை மாரியம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் மாலை 6 மணி வரை அய்யனார் கோவில் தெரு, நண்பர்கள் சார்பில் மாபெரும் சமபந்தி அன்னதானம் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று காலை முதல் தற்பொழுது வரை 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை கொண்டு சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அய்யனார் கோவில் தெரு, நண்பர்கள் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.