அதிமுக நிர்வாகி கொலை; உறவினர்கள் பலமணி நேரமாக போராட்டம்!

68பார்த்தது
அதிமுக நிர்வாகி கொலை; உறவினர்கள் பலமணி நேரமாக போராட்டம்!
சேலம் மாநகர், கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகம், கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு செல்லும் வழியில் சஞ்சீவிராயன் பேட்டை பகுதியில், நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டி அதிமுகவினர் மற்றும் குடும்பத்தார் பல மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் செய்த நிலையில் மாநகர காவல் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி