சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு தினக்கூலியை ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக உயர்த்துவது என சென்னை மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் மலிவு விலையில் இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம் என உணவு வகைகள் விற்கப்படுகிறது. திமுக ஆட்சியிலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. ஒரு சில இடங்களில் இந்த திட்டத்திற்கு சரியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் திட்டத்தை முடக்க திமுக அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.