புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.9 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி அலுவல் மொழியாக உள்ளது. 56.37% இந்தியர்களின் தாய்மொழி இந்தி அல்ல என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது இந்திய அலுவல் மொழி சட்டம் 1963 மற்றும் தமிழ்நாடு அலுவல் மொழி சட்டம் 1956 ஆகியவற்றிற்கு எதிரானது அறிவிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.