தமிழ்நாட்டிற்கென தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மாநில கல்விக்கொள்கை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2020இல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022 இல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் ஆலோசனை பெற்று அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை, முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.