சச்சின் டெண்டுல்கரின் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

59பார்த்தது
சச்சின் டெண்டுல்கரின் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு பணியில் மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரராக (எஸ்ஆர்பிஎஃப்) ஜவான் பிரகாஷ் கப்டேவும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஜாம்நர் நகருக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று (மே 15) தனக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஜவான் பிரகாஷ் கப்டேவுக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி