பெற்றோர் இல்லாத 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை அளிக்கப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு
ரூ.1,433 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.