ரவுடி துரைசாமி என்கவுன்டர்- வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

84பார்த்தது
ரவுடி துரைசாமி என்கவுன்டர்- வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
புதுக்கோட்டையில் ரவுடி துரைசாமி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா விசாரணையை தொடங்கினார். ரவுடி துரைசாமியின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு வருகை தந்த ஐஸ்வர்யா, உடலில் பாய்ந்துள்ள குண்டுகள் குறித்தும், சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, துரைசாமியின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்தி