ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பா.சிதம்பரம் இரங்கல்

61பார்த்தது
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பா.சிதம்பரம் இரங்கல்
பழம் பெரும் தலைவர், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான ஆர். எம் வீரப்பன் அவர்களின் மறைவு தமிழக மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா‌.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் சொந்த ஊரான வல்லத்திராக் கோட்டையில் பேசும்போது அவரை நினைவு கூர்ந்தேன். அவருடைய தமிழ்ப் பற்றும், சமுதாயப் பணிகளும், அவர் வகித்த பொறுப்புகளில் அவர் ஆற்றிய பங்களிப்பும் எங்களைப் பெருமைப்பட வைத்தன. அவருடைய மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி