இறுதி ஊர்வலத்தை நிறுத்திவிட்டு போட்டியை பார்த்த உறவினர்கள்

13257பார்த்தது
இறந்தவர்களின் உடலை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நல்லடக்கம் செய்து மரியாதை செலுத்துவதே உலக நடைமுறை. ஆனால் சிலி நாட்டில் உள்ள ஒரு குடும்பம் சமீபத்தில் இறந்த ஃபெனா என்பவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அவர்கள் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தை நிறுத்திவிட்டு கால்பந்து போட்டியை பார்த்து ரசித்தனர்.

இறந்த ஃபெனாவுக்கு கால்பந்து விளையாட்டைப் பார்க்க பிடிக்கும். இந்த நிலையில், அவரது உடல் ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இறுதிச் சடங்கு நாளன்று சிலி-பெரு இடையே நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்தது மட்டுமல்லாமல், சவப்பெட்டியில் சடலமாக இருந்த ஃபெனாவும் பார்ப்பதற்காக சவப்பெட்டியை திறந்தே வைத்திருந்தனர். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி