ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்கு பதிவு நடக்கும் இன்று, பெண் ஒருவர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காமல் உள்ளதால் இது போன்று சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டி கீழக்கரை வாக்குச்சாவடி எண் 64 ல் பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக பெண் ஒருவர் பலாப்பழ சின்னத்தோடு உள்ள துண்டு பிரசுரம் மற்றும் பதாகையுடன் வாக்கு சேகரித்தார்.அதனை அப்பகுதி பொதுமக்கள் கண்டுபிடித்து காவல்துறையிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.