

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதிப்பு
ராமேஸ்வரத்தில் இருந்து ஜன., 25 ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சச்சின் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து, படகில் இருந்த 15 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளை தொடர்ந்து அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில், 14 மீனவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் அது 2.03 லட்சம் ரூபாய். மேலும் அந்த படகின் டிரைவர் ஜெயபால், 56, என்பவருக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அது, இந்திய ரூபாய் மதிப்பில் 58 லட்சம் ரூபாய். மத்திய, மாநில அரசுகள் அபராதத்தை செலுத்தி மீனவர்களை விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தினர்.