7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

61பார்த்தது
7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!
திருப்பூர், கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி