பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்

81பார்த்தது
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே. பயத்தில் இருக்கிறீர்களா? வழக்கமாகப் பூட்டிய அறையில்தான் அதானி, அம்பானி பெயரையெல்லாம் சொல்வீர்கள். இப்போது பொது வெளியில் பேசத் தொடங்கியுள்ளீர்கள். டெம்போவில் காசு வருவதாகப் பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுகிறீர்களா? முடிந்தால் ED, CBI-ஐ ஏவி விசாரணை செய்யச் சொல்லுங்கள். நான் மீண்டும் சொல்கிறேன். இந்த தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே அளவு தொகையை காங்கிரஸ் 'மகாலட்சுமி திட்டம், முதல் வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம்' மூலமாக மக்களைச் செல்வந்தர்களாக மாற்றுவோம். பாஜக 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியது, நாங்கள் கோடிக்கணக்கானவர்களை லட்சாதிபதிகளை உருவாக்குவோம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி