நீட் தேர்வு விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி

60பார்த்தது
நீட் தேர்வு விவகாரம், வினாத்தாள் கசிவு குறித்து ஆக்கபூர்வமான விவாதம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து கோரிக்கை வைத்தோம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் நாடாளுமன்றத்தில் இது குறித்து நாங்கள் விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை. நீட் விவகாரம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்களை பதட்டமடைய செய்துள்ளது. இது தொடர்பாக மனிதாபிமான முறையில் விவாதிக்க பிரதமர் மோடி முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவராக வேண்டும் என கடினமாக படித்தவர்களின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. மாணவர்களுக்கு தரவேண்டிய மரியாதை பெற்று தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி