5 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் விடுதலையானார். நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்து ஜனவரி மாதம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பணமோசடி குற்றங்களில் ஹேமந்த் சோரன் குற்றவாளி என்று நம்புவதற்கு, எந்த காரணமும் இல்லை. அவருக்கு நேரடியாக தொடர்பு உள்ளது என்ற அமலாக்கத்துறையின் அறிக்கையும் தெளிவற்றவை என்று கூறியுள்ள ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.