இன்றைய இந்திய சினிமாவில் ஹாலிவுட் தரத்தில் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் எனப்படும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதாவது வெவ்வேறு படங்களை ஒரு முக்கிய புள்ளியில் இணைத்து தனி தனி ஹீரோக்களை வைத்து கதை சொல்லுவது போன்ற படங்கள் வெளியாகிவருகின்றன. அது அந்தவகையில், “இந்தியன், முதல்வன், சிவாஜி மூவரையும் ஒரே படத்தில் கொண்டுவரலாம் என 2008ல் எனக்கு யோசனை வந்தது. என்னுடைய இணை இயக்குநர்களிடம் இதனை கூறியபோது அவர்கள் பெரிதாக இதை ஊக்குவிக்கவில்லை. அதனால், அப்படியே அதை கைவிட்டுவிட்டேன்.” என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சங்கர் கூறியுள்ளார்.