மரத்தின் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்!

51பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர மரத்தின் மீது மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் பாருக் அலி (40), சுல்தான் பீவி (50), மைம் பொன்பீவி (55), ரசூல் பீவி (60) ஆகிய நான்கு பேரும் காரில் திங்கள்கிழமை மீமிசல் நோக்கிச் சென்றனா். காசியாா்மடம் என்னும் இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வழக்குரைஞா் பாருக் அலியின் தாய் ரசூல் பீவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் காயமடைந்தனா். அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நசுங்கியிருந்த காருக்குள் இருந்து ரசூல் பீவியின் உடலை தீயணைப்புத்துறையினா் மீட்டு உடற்கூராய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி