டேக்வாண்டோ தற்காப்பு கலை பயிற்சி பள்ளி 5-வது கிளை துவக்கம்

74பார்த்தது
தண்டர் டேக்வாண்டோ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் 14-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஐந்தாவது கிளை அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனை அருகில் துவங்கப்பட்டது. சங்க தலைவர் மாதவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கந்தன், செயலாளர் மாஸ்டர் தாமோதரன் தலைமை தாங்கினர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர் சுப்பிரமணி, ஊர் தலைவர்கள் பிரபாகரன் மற்றும் ஆறுமுகம் மற்றும் கண்ணப்பன், சங்கர், மணி ஆகியோர் கலந்துகொண்டு கிளையின் பெயர் பலகையை திறந்து வைத்து பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தனர். இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளையின் பயிற்சியாளர் பார்த்தசாரதி செய்திருந்தார். உடன் மாரிமுத்து, ஜான் எட்வர்ட், தமிழ் வேந்தன், அமுதன், கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி