காரைக்கால் அடுத்த குரும்பகரம் சேர்ந்த கலையரசன், அவரது தாய் மல்லிகாவுக்கும் சிறு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்திரபாபு ஏன் தாயிடம் சண்டை போடுகிறாய் என கேள்வி எழுப்பி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த கலையரசன் சந்திரபாபுவை அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து நெடுங்காடு போலீசார் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.