காரைக்கால் மாவட்டத்தில் நகர காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போது கடற்கரைச் சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சாலை ஓரத்தில் ஒரு மூட்டை கிடந்ததை போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் இருப்பதை கண்டனர். இதனை அடுத்து அந்த மதுபான பாட்டில் மூட்டையை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.