மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ADGP மாற்றம்

76பார்த்தது
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ADGP மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 60க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக ADGP அருண் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி செந்தில் குமாரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி