சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பரிச்சியமானவர் நடிகை ஸ்ரித்திகா. இவர் தற்போது மகராசி சீரியலில் அவருடன் கதாநாயகனாக நடித்த ஆர்யன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறியுள்ளார். இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்திருக்கிறோம். விரைவில் இது தொடர்பான புகைப்படங்களை பகிர்கிறோம் என அவர் கூறியுள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னாள் கணவர் பெயருடன் இருக்கும் ஸ்ரித்திகா சனீஷ் என்பதை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றமுடியவில்லை, விரைவில் அது மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார்.