ஒடிசா: ராஷ்மி ரஞ்சினி என்ற இளம்பெண்ணுக்கும், தேபாஷிஷ் என்ற காவலருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஷ்மி, கணவர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ராஷ்மியை வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்ததாக அவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.