I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலை ரூ.500-க்கும், பெட்ரோல் விலை ரூ.75-க்கும் நிர்ணயம் செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனியில்
திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில்
நீட் தேர்வை கொண்டு வரவில்லை.
நீட் தேர்வால் இதுவரை 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கு மத்திய
பாஜக அரசும் அப்போதைய அதிமுக அரசும் தான் காரணம் என்றார்.