சிஐடியு சார்பில் மே தின விழா பேரணி குறித்த பிரச்சார இயக்கம்

70பார்த்தது
சிஐடியு சார்பில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற்சங்க மையமான சிஐடியு சார்பில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மே ஒன்றாம் தேதி புதன்கிழமை மாலை 4 மணி அளவில் பேரணியும் அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது இதில் வர்க்கத்தை திரட்டுவோம் வல்லமை பெறுவோம் என்ற முழக்கத்தோடு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு பிரச்சார இயக்கம் நடைபெற்றது, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் மாவட்ட தலைவர் ரங்கநாதன் மற்றும் உறுப்பினர்கள் மே தின விழாவிற்கான துண்டு பிரசுரங்களை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பிரச்சாரம் இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி, மற்றும் சிஐடியு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி