பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகரம், ஆலத்தூர் மேற்கு, வேப்பந்தட்டை கிழக்கு, வேப்பந்தட்டை மேற்கு ஆகிய ஒன்றியங்களில், பொதுமக்கள் பயன்பெறும வகையில் தி. மு. க. சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தி. மு. க. சார்பில், கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தி. மு. க. பெரம்பலூர்
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் - பெரம்பலூர்
சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, நீர், மோர், பானகம், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.