அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்  திறப்பு

1056பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அருகே உள்ள  அகரம்சீகூர் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் வேப்பூர் வடக்கு ஒன்றிய அ. தி. மு. க. சார்பில் கோடைகால  தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் , பானகம் , வெள்ளரிக்காய் , தர்பூசணி  ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம் , பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன். வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி. பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், பெருமத்தூர் கவுன்சிலர் சுகந்தி காருண்யமூர்த்தி, கீளப்புலியூர் கிளை செயலாளர் நடராஜன்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி